எம் வெங் காமம்
|
|
எம் வெங் காமம் இயைவது ஆயின்,
|
|
மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர்
|
|
கொம்மைஅம் பசுங் காய்க் குடுமி விளைந்த
|
|
பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித்
|
5
|
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன,
|
|
வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின்
|
|
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்,
|
|
அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல
|
|
தோழிமாரும் யானும் புலம்ப,
|
10
|
சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன்
|
|
பாழி அன்ன கடியுடை வியல் நகர்ச்
|
|
செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி,
|
|
அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத்
|
|
துய்த்த வாய, துகள் நிலம் பரக்க,
|
15
|
கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி,
|
|
வன் கை எண்கின் வய நிரை பரக்கும்
|
|
இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்கு
|
|
குன்ற வேயின் திரண்ட என்
|
|
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே!
|
மகட்போக்கிய
தாய்சொல்லியது. - மாமூலனார்
|
|
மேல் |