எரி அகைந்தன்ன தாமரை இடை இடை
|
|
எரி அகைந்தன்ன தாமரை இடை இடை
|
|
அரிந்து கால் குவித்த செந் நெல் வினைஞர்
|
|
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின்,
|
|
ஆய் கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர!
|
5
|
பெரிய நாண் இலைமன்ற; 'பொரி எனப்
|
|
புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய, ஒள் நுதல்,
|
|
நறு மலர்க்காண் வரும் குறும் பல் கூந்தல்,
|
|
மாழை நோக்கின், காழ் இயல் வன முலை,
|
|
எஃகுடை எழில் நலத்து, ஒருத்தியொடு நெருநை
|
10
|
வைகுபுனல் அயர்ந்தனை' என்ப; அதுவே,
|
|
பொய் புறம் பொதிந்து, யாம் கரப்பவும்,
கையிகந்து
|
|
அலர் ஆகின்றால் தானே; மலர்தார்,
|
|
மை அணி யானை, மறப் போர்ச் செழியன்
|
|
பொய்யா விழவின் கூடற் பறந்தலை,
|
15
|
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர்
|
|
கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி,
|
|
இரங்குஇசை முரசம் ஒழிய, பரந்து அவர்
|
|
ஓடுபுறம் கண்ட ஞான்றை,
|
|
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே.
|
தோழி தலைமகனை வாயில்
மறுத்தது. - பரணர்
|
|
மேல் |