எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து
|
|
எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து,
|
|
பொரி அகைந்தன்ன பொங்கு பல் சிறு மீன்,
|
|
வெறி கொள் பாசடை, உணீஇயர், பைப்பயப்
|
|
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும்
|
5
|
துறைகேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை
|
|
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது
|
|
செய்யாம்ஆயினும், உய்யாமையின்,
|
|
செறிதொடி தெளிர்ப்ப வீசி, சிறிது அவண்
|
|
உலமந்து வருகம் சென்மோ தோழி!
|
10
|
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்
|
|
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும்
|
|
களிறு பெறு வல்சிப் பாணன் எறியும்
|
|
தண்ணுமைக் கண்ணின் அலைஇயர், தன் வயிறே.
|
தலைமகள் தன்னைப்
புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை, அவட்குப்
பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - ஆலங்குடி
வங்கனார்
|
|
மேல் |