எவன் கொல் வாழி, தோழி
|
|
எவன் கொல்? வாழி, தோழி! மயங்கு பிசிர்
|
|
மல்கு திரை உழந்த ஒல்கு நிலைப் புன்னை
|
|
வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப,
|
|
மணம் கமழ் இள மணல் எக்கர்க் காண்வர,
|
5
|
கணம் கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட,
|
|
கொடுஞ்சி நெடுந் தேர் இளையரொடு நீக்கி,
|
|
தாரன், கண்ணியன், சேர வந்து, ஒருவன்,
|
|
வரி மனை புகழ்ந்த கிளவியன், யாவதும்
|
|
மறு மொழி பெறாஅன் பெயர்ந்தனன்;
அதற்கொண்டு
|
10
|
அரும் படர் எவ்வமொடு பெருந் தோள் சாஅய்,
|
|
அவ் வலைப் பரதவர் கானல் அம் சிறு குடி
|
|
வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி,
|
|
இறை வளை நெகிழ்ந்த நம்மொடு
|
|
துறையும் துஞ்சாது, கங்குலானே!
|
தலைமகற்குக் குறை நேர்ந்த
தோழி தலைமகட்குக் குறை நயப்பக் கூறியது. -
செல்லூர் கிழார் மகனார்
பெரும்பூதங்கொற்றனார்
|
|
மேல் |