என் ஆவதுகொல் தானே
|
|
என் ஆவதுகொல் தானே முன்றில்,
|
|
தேன் தேர் சுவைய, திரள் அரை, மாஅத்து,
|
|
கோடைக்கு ஊழ்த்த, கமழ் நறுந் தீம் கனி,
|
|
பயிர்ப்புறப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ,
|
5
|
இறாலொடு கலந்த, வண்டு மூசு, அரியல்
|
|
நெடுங் கண் ஆடு அமைப் பழுநி, கடுந் திறல்
|
|
பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான்
கோட்டுக்
|
|
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி, குறவர்,
|
|
முறித் தழை மகளிர் மடுப்ப, மாந்தி,
|
10
|
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி,
|
|
'யானை வவ்வின தினை' என, நோனாது,
|
|
இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇ,
|
|
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன்
|
|
நிலையா நல் மொழி தேறிய நெஞ்சே?
|
தலைமகன் சிறைப்புறத்தானாக,
தோழி சொல்லெடுப்ப, தலைமகள் சொல்லியது.
-மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
|
|
மேல் |