என் மகள் பெரு மடம்
|
|
என் மகள் பெரு மடம் யான் பாராட்ட,
|
|
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப,
|
|
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர்,
|
|
மணன் இடையாகக் கொள்ளான், 'கல் பகக்
|
5
|
கண மழை துறந்த கான் மயங்கு அழுவம்
|
|
எளியவாக, ஏந்து கொடி பரந்த
|
|
பொறி வரி அல்குல் மாஅயோட்கு' எனத்
|
|
தணிந்த பருவம் செல்லான், படர்தரத்
|
|
துணிந்தோன்மன்ற துனை வெங் காளை
|
10
|
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்தி,
|
|
போழ் புண் படுத்த பொரி அரை ஓமைப்
|
|
பெரும் பொளிச் சேயரை நோக்கி, ஊன் செத்து,
|
|
கருங் கால் யாஅத்துப் பருந்து வந்து இறுக்கும்
|
|
சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடுங்
கோட்டுக்
|
15
|
கோடை வெவ் வளிக்கு உலமரும்
|
|
புல் இலை வெதிர நெல் விளை காடே.
|
மகட் போக்கிய
செவிலித்தாய் சொல்லியது. - கயமனார்
|
|
மேல் |