ஏனலும் இறங்கு குரல்
|
|
ஏனலும் இறங்கு குரல் இறுத்தன; நோய் மலிந்து,
|
|
ஆய்கவின் தொலைந்த, இவள் நுதலும்; நோக்கி
|
|
ஏதில மொழியும், இவ் ஊரும்; ஆகலின்,
|
|
களிற்று முகம் திறந்த கவுளுடைப் பகழி,
|
5
|
வால் நிணப் புகவின், கானவர் தங்கை
|
|
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழைக் கண்
|
|
ஒல்கு இயற் கொடிச்சியை நல்கினைஆயின்,
|
|
கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப!
|
|
துளிதலைத் தலைஇய சாரல் நளி சுனைக்
|
10
|
கூம்பு முகை அவிழ்த்த குறுஞ் சிறைப் பறவை
|
|
வேங்கை விரி இணர் ஊதி, காந்தள்
|
|
தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை
|
|
இருங் கவுட் கடாஅம் கனவும்,
|
|
பெருங் கல் வேலி, நும் உறைவு இன் ஊர்க்கே.
|
தோழி தலைமகளை இடத்து
உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு
நின்று,வரைவு கடாயது. - தாயங்கண்ணனார்
|
|
மேல் |