ஒடுங்கு ஈர் ஓதி
|
|
ஒடுங்கு ஈர் ஓதி நினக்கும் அற்றோ?
|
|
நடுங்கின்று, அளித்து, என் நிறை இல் நெஞ்சம்.
|
|
அடும்பு கொடி சிதைய வாங்கி, கொடுங் கழிக்
|
|
குப்பை வெண் மணற் பக்கம் சேர்த்தி,
|
5
|
நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த
|
|
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை
|
|
பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க்
|
|
கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்:
|
|
முள் உறின் சிறத்தல் அஞ்சி, மெல்ல
|
10
|
வாவு உடைமையின் வள்பின் காட்டி,
|
|
ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி
|
|
செழு நீர்த் தண் கழி நீந்தலின், ஆழி
|
|
நுதிமுகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல்,
|
|
பாம்பு உயர் தலையின், சாம்புவன நிவப்ப,
|
15
|
இர வந்தன்றால் திண் தேர்; கரவாது
|
|
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய்
|
|
அரவச் சீறூர் காண,
|
|
பகல் வந்தன்றால், பாய்பரி சிறந்தே.
|
தோழி வரைவு மலிந்து
சொல்லியது. குமுழிஞாழலார் நப்பசலையார்
|
|
மேல் |