ஒழித்தது பழித்த
|
|
'ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப்
படர்ந்து,
|
|
உள்ளியும் அறிதிரோ, எம்?' என, யாழ நின்
|
|
முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க,
|
|
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல்; நின்
|
5
|
ஆய் நலம் மறப்பெனோ மற்றே? சேண் இகந்து
|
|
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி
|
|
படு ஞெமல் புதையப் பொத்தி, நெடு நிலை
|
|
முளி புல் மீமிசை வளி சுழற்றுறாஅக்
|
|
காடு கவர் பெருந் தீ ஓடுவயின் ஓடலின்,
|
10
|
அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு
|
|
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து
|
|
இனம் தலை மயங்கிய நனந் தலைப் பெருங்
காட்டு,
|
|
ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால்
பட்டென,
|
|
கள் படர் ஓதி! நிற் படர்ந்து உள்ளி,
|
15
|
அருஞ் செலவு ஆற்றா ஆர் இடை, ஞெரேரெனப்
|
|
பரந்து படு பாயல் நவ்வி பட்டென,
|
|
இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு,
|
|
நிலம் கிளை நினைவினை நின்ற நிற் கண்டு,
|
|
'இன்னகை'! இனையம் ஆகவும், எம்வயின்
|
20
|
ஊடல் யாங்கு வந்தன்று?' என, யாழ நின்
|
|
கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி,
|
|
நறுங் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து,
|
|
வறுங் கை காட்டிய வாய் அல் கனவின்
|
|
ஏற்று ஏக்கற்ற உலமரல்
|
25
|
போற்றாய்ஆகலின், புலத்தியால், எம்மே!
|
பொருள் முற்றிய தலைமகன்
தலைமகளைக் கண்டு சொல்லியது.- மதுரைச்
செங்கண்ணனார்
|
|
மேல் |