ஒறுப்ப ஓவலை
|
|
ஒறுப்ப ஓவலை; நிறுப்ப நில்லலை;
|
|
புணர்ந்தோர் போலப் போற்றுமதி! நினக்கு
யான்
|
|
கிளைஞன் அல்லெனோ? நெஞ்சே! தெனாஅது
|
|
வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை
|
5
|
மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின்
|
|
ஆ கொள் மூதூர்க் கள்வர் பெருமகன்,
|
|
ஏவல் இளையர் தலைவன், மேவார்
|
|
அருங் குறும்பு எறிந்த ஆற்றலொடு, பருந்து படப்
|
|
பல் செருக் கடந்த செல் உறழ் தடக் கை,
|
10
|
கெடாஅ, நல் இசைத் தென்னன், தொடாஅ
|
|
நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அவ்
|
|
வரையரமகளிரின் அரியள்,
|
|
அவ் வரி அல்குல் அணையாக்காலே!
|
அல்லகுறிப்பட்ட தலைமகன்
தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரைக்
கணக்காயனார்
|
|
மேல் |