ஓங்கு நிலைத் தாழி
|
|
ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்தி,
|
|
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
|
|
பந்தர் வயலை, பந்து எறிந்து ஆடி,
|
|
இளமைத் தகைமையை வள மனைக் கிழத்தி!
|
5
|
'பிதிர்வை நீரை வெண் நீறு ஆக' என,
|
|
யாம் தற் கழறுங் காலை, தான் தன்
|
|
மழலை இன் சொல், கழறல் இன்றி,
|
|
இன் உயிர் கலப்பக் கூறி, நன்னுதல்
|
|
பெருஞ் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள்,
|
10
|
ஏதிலாளன் காதல் நம்பி,
|
|
திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக்
|
|
குருளை எண்கின் இருங் கிளை கவரும்
|
|
வெம் மலை அருஞ் சுரம், நம் இவண் ஒழிய,
|
|
இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம்,
|
15
|
நெருநைப் போகிய பெரு மடத் தகுவி
|
|
ஐது அகல் அல்குல் தழை அணிக் கூட்டும்
|
|
கூழை நொச்சிக் கீழது, என் மகள்
|
|
செம் புடைச் சிறு விரல் வரித்த
|
|
வண்டலும் காண்டிரோ, கண் உடையீரே?
|
மகட் போக்கிய தாய்
சொல்லியது. - கயமனார்
|
|
மேல் |