வலி மிகு முன்பின்
|
|
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு
|
|
பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி,
|
|
மடக் கண் எருமை மாண் நாகு தழீஇ,
|
|
படப்பை நண்ணி, பழனத்து அல்கும்
|
5
|
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடுந் தேர்,
|
|
ஒள் இழை மகளிர் சேரி, பல் நாள்
|
|
இயங்கல் ஆனாதுஆயின்; வயங்கிழை
|
|
யார்கொல் அளியள்தானே எம் போல்
|
|
மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி,
|
10
|
வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின்
|
|
கண்பனி ஆகத்து உறைப்ப, கண் பசந்து,
|
|
ஆயமும் அயலும் மருள,
|
|
தாய் ஓம்பு ஆய்நலம் வேண்டாதோளே?
|
வாயில் வேண்டிச் சென்ற
பாணற்குத் தலைமகள் வாயில் மறுத்தது.-உவர்க்கண்ணூர்ப்
புல்லங்கீரனார்
|
|
மேல் |