வளம் கெழு திரு நகர்ப்
|
|
வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது
எறியினும்,
|
|
இளந் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்,
|
|
'உயங்கின்று, அன்னை! என் மெய்' என்று அசைஇ,
|
|
மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென,
|
5
|
முயங்கினள் வதியும்மன்னே! இனியே,
|
|
தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்,
|
|
நெடு மொழித் தந்தை அருங் கடி நீவி,
|
|
நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற என்
|
|
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி
|
10
|
வல்லகொல், செல்லத் தாமே கல்லென
|
|
ஊர் எழுந்தன்ன உரு கெழு செலவின்,
|
|
நீர் இல் அத்தத்து ஆர் இடை, மடுத்த,
|
|
கொடுங் கோல் உமணர், பகடு தெழி தெள் விளி
|
|
நெடும் பெருங் குன்றத்து இமிழ் கொள இயம்பும்,
|
15
|
கடுங் கதிர் திருகிய, வேய் பயில், பிறங்கல்,
|
|
பெருங் களிறு உரிஞ்சிய மண்அரை யாஅத்து
|
|
அருஞ் சுரக் கவலைய அதர் படு மருங்கின்,
|
|
நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர்,
|
|
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்,
|
20
|
நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி,
|
|
வைகுறு மீனின் தோன்றும்
|
|
மை படு மா மலை விலங்கிய சுரனே?
|
மகட்போக்கிய
செவிலித்தாய் சொல்லியது. - கயமனார்
|
|
உரை |
மேல் |