வளை வாய்க் கோதையர்
|
|
'வளை வாய்க் கோதையர் வண்டல் தைஇ,
|
|
இளையோர், செல்ப; எல்லும் எல்லின்று;
|
|
அகல் இலைப் புன்னைப் புகர் இல் நீழல்,
|
|
பகலே எம்மொடு ஆடி, இரவே,
|
5
|
காயல் வேய்ந்த தேயா நல் இல்
|
|
நோயொடு வைகுதிஆயின், நுந்தை
|
|
அருங் கடிப் படுவலும்' என்றி; மற்று, 'நீ
|
|
செல்லல்' என்றலும் ஆற்றாய்; 'செலினே,
|
|
வாழலென்' என்றி, ஆயின்; ஞாழல்
|
10
|
வண்டு படத் ததைந்த கண்ணி, நெய்தல்
|
|
தண் அரும் பைந் தார் துயல்வர, அந்தி,
|
|
கடல் கெழு செல்வி கரை நின்றாங்கு,
|
|
நீயே கானல் ஒழிய, யானே
|
|
வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி
துறந்து,
|
15
|
ஆடு மகள் போலப் பெயர்தல்
|
|
ஆற்றேன்தெய்ய; அலர்க, இவ் ஊரே!
|
பகலே சிறைப்புறமாகத்
தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி
சொல்லியது. -அம்மூவனார்
|
|
உரை |
மேல் |