வறன் உறு செய்யின்
|
|
'வறன் உறு செய்யின் வாடுபு வருந்தி,
|
|
படர் மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல்
|
|
சிறு நனி ஆன்றிகம்' என்றி தோழி!
|
|
நல்குநர் ஒழித்த கூலிச் சில் பதம்
|
5
|
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு,
|
|
நீர் வாழ் முதலை ஆவித்தன்ன
|
|
ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடத்து,
|
|
ஊர் இஃது என்னாஅர், தீது இல் வாழ்க்கை,
|
|
சுரமுதல் வருத்தம் மரமுதல் வீட்டி,
|
10
|
பாடு இன் தெண் கிணை கறங்க, காண்வர,
|
|
குவி இணர் எருக்கின் ததர் பூங் கண்ணி
|
|
ஆடூஉச் சென்னித் தகைப்ப, மகடூஉ,
|
|
முளரித் தீயின் முழங்கு அழல் விளக்கத்துக்
|
|
களரி ஆவிரைக் கிளர் பூங் கோதை,
|
15
|
வண்ண மார்பின் வன முலைத் துயல்வர,
|
|
செறி நடைப் பிடியொடு களிறு புணர்ந்தென்னக்
|
|
குறு நெடுந் தூம்பொடு முழவுப் புணர்ந்து இசைப்ப,
|
|
கார் வான் முழக்கின் நீர்மிசைத் தெவுட்டும்
|
|
தேரை ஒலியின் மாண, சீர் அமைத்து,
|
20
|
சில் அரி கறங்கும் சிறு பல் இயத்தொடு
|
|
பல் ஊர் பெயர்வனர் ஆடி, ஒல்லென,
|
|
தலைப் புணர்த்து அசைத்த பல் தொகைக் கலப்
பையர்,
|
|
இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த
|
|
புன் தலை மன்றம் காணின், வழி நாள்,
|
25
|
அழுங்கல் மூதூர்க்கு இன்னாதாகும்;
|
|
அதுவே மருவினம், மாலை; அதனால்,
|
|
காதலர் செய்த காதல்
|
|
நீடு இன்று மறத்தல் கூடுமோ, மற்றே?
|
பிரிவிடை வேறுபட்ட தலைமகள்
வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது. -
அதியன் விண்ணத்தனார்
|
|
உரை |
மேல் |