வாங்கு அமை புரையும்
|
|
வாங்கு அமை புரையும் வீங்கு இறைப் பணைத்
தோள்,
|
|
சில் சுணங்கு அணிந்த, பல் பூண், மென் முலை,
|
|
நல் எழில், ஆகம் புல்லுதல் நயந்து,
|
|
மரம் கோள் உமண் மகன் பேரும் பருதிப்
|
5
|
புன் தலை சிதைத்த வன் தலை நடுகல்
|
|
கண்ணி வாடிய மண்ணா மருங்குல்,
|
|
கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து, அவ்
|
|
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும்
|
|
கண் பொரி கவலைய கானத்து ஆங்கண்,
|
10
|
நனந்தலை யாஅத்து அம் தளிர்ப் பெருஞ் சினை,
|
|
இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார்,
|
|
நெடுஞ் செவிக் கழுதைக் குறுங் கால் ஏற்றைப்
|
|
புறம் நிறை பண்டத்துப் பொறை அசாஅக்
களைந்த
|
|
பெயர் படை கொள்ளார்க்கு உயவுத் துணை ஆகி,
|
15
|
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய்; பெயர்ந்து
நின்று
|
|
உள்ளினை வாழி, என் நெஞ்சே! கள்ளின்
|
|
மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழைக் கண்,
|
|
சில் மொழிப் பொலிந்த துவர் வாய்,
|
|
பல் மாண் பேதையின் பிரிந்த நீயே.
|
தலைமகன் இடைச் சுரத்து மீளக்
கருதிய நெஞ்சினைக் கழறிப் போயது. -மதுரை
மருதன் இளநாகனார்
|
|
உரை |
மேல் |