வாடல் உழுஞ்சில்
|
|
வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர்
|
|
ஆடுகளப் பறையின், அரிப்பன ஒலிப்ப,
|
|
கோடை நீடிய அகன் பெருங் குன்றத்து,
|
|
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு,
|
5
|
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும்
|
|
காடு இறந்தனரே, காதலர். மாமை,
|
|
அரி நுண் பசலை பாஅய், பீரத்து
|
|
எழில் மலர் புரைதல்வேண்டும். அலரே,
|
|
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
|
10
|
தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணி,
|
|
புன்னை குறைத்த ஞான்றை, வயிரியர்
|
|
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே. யானே,
|
|
காதலற் கெடுத்த சிறுமையொடு, நோய் கூர்ந்து,
|
|
ஆதிமந்தி போல, பேதுற்று
|
15
|
அலந்தனென் உழல்வென்கொல்லோ
பொலந்தார்,
|
|
கடல் கால் கிளர்ந்த வென்றி நல் வேல்,
|
|
வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய
|
|
உடை மதில் ஓர் அரண் போல,
|
|
அஞ்சுவரு நோயொடு, துஞ்சாதேனே!
|
வற்புறுக்கும் தோழிக்குத்
தலைமகள் சொல்லியது. - வெள்ளிவீதியார்
|
|
உரை |
மேல் |