வாரணம் உரறும்
|
|
வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில்
|
|
பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி
|
|
இன் இசை இமிழ் இயம் கடுப்ப, இம்மெனக்
|
|
கல் முகை விடர்அகம் சிலம்ப, வீழும்
|
5
|
காம்பு தலைமணந்த ஓங்கு மலைச் சாரல்;
|
|
இரும்பு வடித்தன்ன கருங் கைக் கானவன்
|
|
விரி மலர் மராஅம் பொருந்தி, கோல்
தெரிந்து,
|
|
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி,
|
|
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு, தன்
|
10
|
புல் வேய் குரம்பை புலர ஊன்றி,
|
|
முன்றில் நீடிய முழவு உறழ் பலவில்,
|
|
பிழி மகிழ் உவகையன், கிளையொடு கலி
சிறந்து,
|
|
சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும்
|
|
குன்ற நாட! நீ அன்பிலை ஆகுதல்
|
15
|
அறியேன் யான்; அஃது அறிந்தனென்ஆயின்
|
|
அணி இழை, உண்கண், ஆய் இதழ்க் குறுமகள்
|
|
மணி ஏர் மாண் நலம் சிதைய,
|
|
பொன் நேர் பசலை பாவின்றுமன்னே!
|
தோழி தலைமகளை இடத்து
உய்த்து வந்து, தலைமகனை வரைவு கடாயது. -மதுரைப்
பாலாசிரியர் நப்பாலனார்
|
|
உரை |
மேல் |