வான் கடற் பரப்பில்
|
|
வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய,
|
|
மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த,
|
|
முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை,
|
|
புள் இறைகூரும் மெல்லம் புலம்ப!
|
5
|
நெய்தல் உண்கண் பைதல கலுழ,
|
|
பிரிதல் எண்ணினைஆயின், நன்றும்
|
|
அரிது உற்றனையால் பெரும! உரிதினின்
|
|
கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும்
கொண்டலொடு
|
|
குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
|
10
|
பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர்
|
|
மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி,
|
|
மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும்
|
|
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே.
|
இரவுக்குறி வந்து தலைமகளைக்
கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு
நின்று, தோழி சொல்லியது. - அம்மூவனார்
|
|
உரை |
மேல் |