வானம் ஊர்ந்த
|
|
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம்
|
|
நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம்
காட்டு,
|
|
இலை இல மலர்ந்த முகை இல் இலவம்
|
|
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த
|
5
|
அம் சுடர் நெடுங் கொடி பொற்பத் தோன்றி,
|
|
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம்
|
|
எம்மொடு கழிந்தனர்ஆயின், கம்மென,
|
|
வம்பு விரித்தன்ன பொங்கு மணற் கான்
யாற்றுப்
|
|
படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர்,
|
10
|
மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம்
|
|
அவரும் பெறுகுவர்மன்னே! நயவர,
|
|
நீர் வார் நிகர் மலர் கடுப்ப, ஓ மறந்து
|
|
அறு குளம் நிறைக்குந போல, அல்கலும்
|
|
அழுதல் மேவல ஆகி,
|
15
|
பழி தீர் கண்ணும் படுகுவமன்னே!
|
தலைமகன் பொருள்வயிற்
பிரிந்த இடத்து, ஆற்றாளாய தலைமகள் வேறுபாடு
கண்டு ஆற்றாளாய தோழிக்கு, தலைமகள்,
'ஆற்றுவல்'என்பது படச் சொல்லியது. -
ஒளவையார்
|
|
உரை |
மேல் |