வானம் பெயல் வளம் கரப்ப
|
|
வானம் பெயல் வளம் கரப்ப, கானம்
|
|
உலறி இலை இலவாக, பல உடன்
|
|
ஏறுடை ஆயத்து இனம் பசி தெறுப்ப,
|
|
கயன் அற வறந்த கோடையொடு நயன் அறப்
|
5
|
பெரு வரை நிவந்த மருங்கில், கொடு வரிப்
|
|
புலியொடு பொருது சினம் சிறந்து, வலியோடு
|
|
உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில், பரூஉப்
பரல்,
|
|
சிறு பல் மின்மினி கடுப்ப, எவ்வாயும்
|
|
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை
|
10
|
எருவை இருஞ் சிறை இரீஇய, விரி இணர்த்
|
|
தாது உண் தும்பி முரல் இசை கடுப்ப,
|
|
பரியினது உயிர்க்கும் அம்பினர், வெருவர
|
|
உவலை சூடிய தலையர், கவலை
|
|
ஆர்த்து, உடன் அரும் பொருள் வவ்வலின்,
யாவதும்
|
15
|
சாத்து இடை வழங்காச் சேண் சிமை அதர
|
|
சிறியிலை நெல்லித் தீம் சுவைத் திரள்
காய்
|
|
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று,
|
|
புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி,
|
|
அறு மருப்பு ஒழித்த தலைய, தோல் பொதி,
|
20
|
மறு மருப்பு இளங் கோடு அதிரக் கூஉம்
|
|
சுடர் தெற வருந்திய அருஞ் சுரம் இறந்து, ஆங்கு
|
|
உள்ளினை வாழிய, நெஞ்சே! போது எனப்
|
|
புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல்,
|
|
நல் எழில், மழைக் கண், நம் காதலி
|
25
|
மெல் இறைப் பணைத்தோள் விளங்கும் மாண்
கவினே.
|
பொருள்வயிற் போகாநின்ற
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச்
சொல்லி யது. - பாலை பாடிய பெருங் கடுங்கோ
|
|
உரை |
மேல் |