வானம் வாய்ப்பக் கவினி
|
|
வானம் வாய்ப்பக் கவினி, கானம்
|
|
கமஞ் சூல் மா மழை கார் பயந்து இறுத்தென,
|
|
மணி மருள் பூவை அணி மலர் இடைஇடை,
|
|
செம் புற மூதாய் பரத்தலின், நன் பல
|
5
|
முல்லை வீ கழல் தாஅய், வல்லோன்
|
|
செய்கை அன்ன செந் நிலப் புறவின்;
|
|
வாஅப் பாணி வயங்கு தொழிற் கலிமாத்
|
|
தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க,
|
|
இடி மறந்து, ஏமதி வலவ! குவிமுகை
|
10
|
வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த
|
|
ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு
|
|
கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை
|
|
கடுமான் தேர் ஒலி கேட்பின்,
|
|
நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே.
|
வினை முற்றி மீண்ட தலைமகன்
பாகற்கு உரைத்தது. - சீத்தலைச் சாத்தனார்
|
|
உரை |
மேல் |