வானம் வேண்டா வறன்இல்
|
|
வானம் வேண்டா வறன்இல் வாழ்க்கை
|
|
நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து
ஈர்க்கும்
|
|
மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை
|
|
நீர்மிசை நிவந்த நெடுந் தாள் அகல் இலை
|
5
|
இருங் கயம் துளங்க, கால் உறுதொறும்
|
|
பெருங் களிற்றுச் செவியின் அலைக்கும்
ஊரனொடு
|
|
எழுந்த கௌவையோ பெரிதே; நட்பே,
|
|
கொழுங் கோல் வேழத்துப் புணை துணையாகப்
|
|
புனல் ஆடு கேண்மை அனைத்தே; அவனே,
|
10
|
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட,
|
|
ஈர்ந் தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப,
|
|
தண் நறுஞ் சாந்தம் கமழும் தோள் மணந்து,
|
|
இன்னும் பிறள் வயினானே; மனையோள்
|
|
எம்மொடு புலக்கும் என்ப; வென் வேல்,
|
15
|
மாரி அம்பின், மழைத்தோற் பழையன்
|
|
காவிரி வைப்பின் போஒர் அன்ன, என்
|
|
செறிவளை உடைத்தலோ இலெனே; உரிதினின்
|
|
யாம் தன் பகையேம்அல்லேம்; சேர்ந்தோர்
|
|
திரு நுதல் பசப்ப நீங்கும்
|
20
|
கொழுநனும் சாலும், தன் உடன் உறை பகையே.
|
தலைமகட்குப் பாங்காயினார்
கேட்ப, இல்லிடைப் பரத்தை சொல்லி
நெருங்கியது. -பரணர்
|
|
உரை |
மேல் |