விசும்பு உற நிவந்த
|
|
'விசும்பு உற நிவந்த மாத் தாள் இகணைப்
|
|
பசுங் கேழ் மெல் இலை அருகு நெறித்தன்ன,
|
|
வண்டு படுபு இருளிய, தாழ் இருங் கூந்தல்
|
|
சுரும்பு உண விரிந்த பெருந் தண் கோதை
|
5
|
இவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு' என
|
|
வீளை அம்பின் விழுத் தொடை மழவர்
|
|
நாள் ஆ உய்த்த நாம வெஞ் சுரத்து
|
|
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின்
|
|
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர்
|
10
|
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும்
|
|
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
|
|
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
|
|
வெருவரு தகுந கானம், 'நம்மொடு
|
|
வருக' என்னுதிஆயின்,
|
15
|
வாரேன்; நெஞ்சம்! வாய்க்க நின் வினையே.
|
பொருள் கடைக்கூட்டிய
நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது. மதுரை
மருதன் இளநாகனார்
|
|
உரை |
மேல் |