விசும்பு விசைத்து எழுந்த
|
|
விசும்பு விசைத்து எழுந்த கூதளங் கோதையின்,
|
|
பசுங் கால் வெண் குருகு வாப் பறை வளைஇ,
|
|
ஆர்கலி வளவயின் போதொடு பரப்ப,
|
|
புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம்,
|
5
|
நலம் கவர் பசலை நலியவும், நம் துயர்
|
|
அறியார்கொல்லோ, தாமே? அறியினும்,
|
|
நம் மனத்து அன்ன மென்மை இன்மையின்,
|
|
நம்முடை உலகம் உள்ளார்கொல்லோ?
|
|
யாங்கு என உணர்கோ, யானே? வீங்குபு
|
10
|
தலை வரம்பு அறியாத் தகை வரல் வாடையொடு
|
|
முலையிடைத் தோன்றிய நோய் வளர் இள முளை
|
|
அசைவுடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடி,
|
|
ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை,
|
|
ஆராக் காதல் அவிர் தளிர் பரப்பி,
|
15
|
புலவர் புகழ்ந்த நார் இல் பெரு மரம்
|
|
நில வரை எல்லாம் நிழற்றி,
|
|
அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே.
|
பிரிவின்கண் தலைமகள் அறிவு
மயங்கிச் சொல்லியது.-ஒளவையார்
|
|
உரை |
மேல் |