விண் அதிர்பு தலைஇய
|
|
விண் அதிர்பு தலைஇய, விரவு மலர் குழைய,
|
|
தண் மழை பொழிந்த தாழ்பெயற் கடை நாள்,
|
|
எமியம் ஆக, துனி உளம் கூர,
|
|
சென்றோர் உள்ளிச் சில் வளை நெகிழ,
|
5
|
பெரு நசை உள்ளமொடு வருநசை நோக்கி
|
|
விளியும் எவ்வமொடு, 'அளியள்' என்னாது
|
|
களிறு உயிர்த்தன்ன கண் அழி துவலை
|
|
முளரி கரியும் முன்பனிப் பானாள்,
|
|
குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை!
|
10
|
எனக்கே வந்தனை போறி! புனற் கால்
|
|
அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து
அவிழ,
|
|
கொடியோர் சென்ற தேஎத்து, மடியாது
|
|
இனையை ஆகிச் செல்மதி;
|
|
வினை விதுப்புறுநர் உள்ளலும் உண்டே!
|
பிரிவின்கண் வற்புறுக்கும்
தோழிக்குத் தலைமகள் ஆற்றாமை மீதூரச்
சொல்லியது. -கழார்க்கீரன் எயிற்றியார்
|
|
உரை |
மேல் |