விரி இணர் வேங்கை
|
|
விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன்,
|
|
தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன்,
|
|
அம் சிலை இடவது ஆக, வெஞ் செலல்
|
|
கணை வலம் தெரிந்து, துணை படர்ந்து உள்ளி,
|
5
|
வருதல் வாய்வது, வான் தோய் வெற்பன்.
|
|
வந்தனன் ஆயின், அம் தளிர்ச் செயலைத்
|
|
தாழ்வு இல் ஓங்கு சினைத் தொடுத்த வீழ்
கயிற்று
|
|
ஊசல் மாறிய மருங்கும், பாய்பு உடன்
|
|
ஆடாமையின் கலுழ்பு இல தேறி,
|
10
|
நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம்
|
|
கண் என மலர்ந்த சுனையும், வண் பறை
|
|
மடக் கிளி எடுத்தல்செல்லாத் தடக் குரல்
|
|
குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி
|
|
கொய்து ஒழி புனமும், நோக்கி; நெடிது நினைந்து;
|
15
|
பைதலன் பெயரலன்கொல்லோ? ஐ தேய்கு
|
|
'அய வெள் அருவி சூடிய உயர் வரைக்
|
|
கூஉம் கணஃது எம் ஊர்' என
|
|
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின், யானே.
|
தோழி தலைமகன் குறை கூறியது;
பகலே சிறைப்புறமாக,தோழி தலைமகட்குச்
சொல்லுவாளாய், தலைமகன் கேட்பச்
சொல்லியதூஉம் ஆம்;தோழி குறி
பெயர்த்திட்டுச் சொல்லியதூஉம் ஆம்.- வடம
வண்ணக்கன் பேரிசாத்தனார்
|
|
உரை |
மேல் |