விருந்தும் பெறுகுநள் போலும்
|
|
விருந்தும் பெறுகுநள் போலும், திருந்து இழைத்
|
|
தட மென் பணைத் தோள், மட மொழி அரிவை
|
|
தளிர் இயல் கிள்ளை இனி தினின் எடுத்த
|
|
வளராப் பிள்ளைத் தூவி அன்ன,
|
5
|
உளர் பெயல் வளர்த்த, பைம் பயிர்ப் புறவில்
|
|
பறைக் கண் அன்ன நிறைச் சுனை தோறும்
|
|
துளி படு மொக்குள் துள்ளுவன சால,
|
|
தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய,
|
|
வளி சினை உதிர்த்தலின், வெறி கொள்பு
தாஅய்,
|
10
|
சிரற் சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த
|
|
வண்டு உண் நறு வீ துமித்த நேமி
|
|
தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள்,
|
|
நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுக,
|
|
செல்லும், நெடுந்தகை தேரே
|
15
|
முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே!
|
வினை முற்றிய தலைமகன் கருத்து
உணர்ந்து உழையர் சொல்லியது. -ஒக்கூர்
மாசாத்தியார்
|
|
உரை |
மேல் |