விலங்கு இருஞ் சிமையக்
|
|
'விலங்கு இருஞ் சிமையக் குன்றத்து உம்பர்,
|
|
வேறு பல் மொழிய தேஎம் முன்னி,
|
|
வினை நசைஇப் பரிக்கும் உரன் மிகு
நெஞ்சமொடு
|
|
புனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி,
|
5
|
செலல் மாண்பு உற்ற நும்வயின், வல்லே,
|
|
வலன் ஆக!' என்றலும் நன்றுமன் தில்ல
|
|
கடுத்தது பிழைக்குவதுஆயின், தொடுத்த
|
|
கை விரல் கவ்வும் கல்லாக் காட்சி,
|
|
கொடுமரம் பிடித்த கோடா வன்கண்,
|
10
|
வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர்,
|
|
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை,
|
|
கூர் நுதிச் செவ் வாய் எருவைச் சேவல்
|
|
படு பிணப் பைந் தலை தொடுவன குழீஇ,
|
|
மல்லல் மொசிவிரல் ஒற்றி, மணி கொண்டு,
|
15
|
வல் வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண்,
|
|
கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு
|
|
ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே.
|
செலவு உணர்த்திய தோழி,
தலைமகள் குறிப்பறிந்து, தலைமகனைச் செலவு
அழுங்குவித்தது. - இறங்கு குடிக் குன்ற நாடன்
|
|
உரை |
மேல் |