ஓடா நல் ஏற்று
|
|
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய
|
|
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க,
|
|
நாடு திறை கொண்டனம்ஆயின் பாக!
|
|
பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு
|
5
|
பெருங் களிற்றுத் தடக் கை புரையக் கால்
வீழ்த்து,
|
|
இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ,
|
|
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும்
|
|
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி,
|
|
பெயல் தொடங்கின்றால், வானம்; வானின்
|
10
|
வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப,
|
|
நால்கு உடன் பூண்ட கால் நவில் புரவிக்
|
|
கொடிஞ்சி நெடுந் தேர் கடும் பரி தவிராது,
|
|
இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து,
|
|
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப,
|
15
|
ஈண்டே காணக் கடவுமதி பூங் கேழ்ப்
|
|
பொலிவன அமர்த்த உண்கண்,
|
|
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே!
|
வினை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரைக்
கூத்தனார்
|
|
மேல் |