கடல் கண்டன்ன
|
|
கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின்
|
|
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின்
|
|
கழை கண்டன்ன தூம்புடைத் திரள் கால்,
|
|
களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில்,
|
5
|
கழு நிவந்தன்ன கொழு முகை இடை இடை
|
|
முறுவல் முகத்தின் பல் மலர் தயங்க,
|
|
பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து,
|
|
வேப்பு நனை அன்ன நெடுங் கண் நீர்ஞெண்டு
|
|
இரை தேர் வெண் குருகு அஞ்சி, அயலது
|
10
|
ஒலித்த பகன்றை இருஞ் சேற்று அள்ளல்,
|
|
திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன்
|
|
நீர் மலி மண் அளைச் செறியும் ஊர!
|
|
மனை நகு வயலை மரன் இவர் கொழுங் கொடி
|
|
அரி மலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ,
|
15
|
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து,
|
|
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கைக்
|
|
குறுந் தொடி துடக்கிய நெடுந் தொடர் விடுத்தது
|
|
உடன்றனள் போலும், நின் காதலி? எம் போல்
|
|
புல் உளைக் குடுமிப் புதல்வற் பயந்து,
|
20
|
நெல்லுடை நெடு நகர் நின் இன்று உறைய,
|
|
என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து
|
|
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி,
|
|
அடித்தென உருத்த தித்திப் பல் ஊழ்
|
|
நொடித்தெனச் சிவந்த மெல் விரல் திருகுபு,
|
25
|
கூர்நுனை மழுகிய எயிற்றள்
|
|
ஊர் முழுதும் நுவலும் நிற் காணிய சென்மே.
|
தோழி தலைமகனை வாயில்
மறுத்தது. மருதம் -
பாடிய இளங்கடுங்கோ |
|
மேல் |