கடல்பாடு அவிந்து
|
|
கடல்பாடு அவிந்து, தோணி நீங்கி,
|
|
நெடு நீர் இருங் கழிக் கடுமீன் கலிப்பினும்;
|
|
வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்;
|
|
மாண் இழை நெடுந் தேர் பாணி நிற்ப,
|
5
|
பகலும் நம்வயின் அகலானாகிப்
|
|
பயின்றுவரும் மன்னே, பனி நீர்ச் சேர்ப்பன்,
|
|
இனியே, மணப்பருங் காமம் தணப்ப நீந்தி,
|
|
'வாராதோர் நமக்கு யாஅர்?' என்னாது,
|
|
மல்லல் மூதூர் மறையினை சென்று,
|
10
|
சொல்லின் எவனோ பாண! 'எல்லி
|
|
மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில்
|
|
துணை ஒன்று பிரியினும் துஞ்சாகாண்' என,
|
|
கண் நிறை நீர் கொடு கரக்கும்,
|
|
ஒண் நுதல் அரிவை, 'யான் என்செய்கோ?' எனவே.
|
தோழி பாணனுக்குச்
சொல்லியது. - கருவூர்ப் பூதஞ்சாத்தனார்
|
|
மேல் |