கடல் முகந்து கொண்ட
|
|
கடல் முகந்து கொண்ட கமஞ் சூல் மா மழை
|
|
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு, இரங்கி,
|
|
என்றூழ் உழந்த புன் தலை மடப் பிடி
|
|
கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய,
|
5
|
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி,
|
|
குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது
|
|
கதிர் மருங்கு அறியாது, அஞ்சுவரப் பாஅய்,
|
|
தளி மயங்கின்றே தண் குரல் எழிலி; யாமே
|
|
கொய் அகை முல்லை காலொடு மயங்கி,
|
10
|
மை இருங் கானம் நாறும் நறு நுதல்,
|
|
பல் இருங் கூந்தல், மெல் இயல் மடந்தை
|
|
நல் எழில் ஆகம் சேர்ந்தனம்; என்றும்
|
|
அளியரோ அளியர்தாமே அளி இன்று
|
|
ஏதில் பொருட்பிணிப் போகி, தம்
|
15
|
இன் துணைப் பிரியும் மடமையோரே!
|
தலைமகன் பொருள்
கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.-
மதுரையாசிரியர் நல்லந்துவனார்
|
|
மேல் |