கடுந் தேர் இளையரொடு நீக்கி
|
|
கடுந் தேர் இளையரொடு நீக்கி, நின்ற
|
|
நெடுந் தகை நீர்மையை அன்றி, நீயும்,
|
|
தொழுதகு மெய்யை, அழிவு முந்துறுத்து,
|
|
பல் நாள் வந்து, பணி மொழி பயிற்றலின்,
|
5
|
குவளை உண்கண் கலுழ, நின்மாட்டு
|
|
இவளும் பெரும் பேதுற்றனள்; ஓரும்
|
|
தாயுடை நெடு நகர்த் தமர் பாராட்ட,
|
|
காதலின் வளர்ந்த மாதர்ஆகலின்,
|
|
பெரு மடம் உடையரோ, சிறிதே; அதனால்,
|
10
|
குன்றின் தோன்றும் குவவு மணற் சேர்ப்ப!
|
|
இன்று இவண் விரும்பாதீமோ! சென்று, அப்
|
|
பூ விரி புன்னைமீது தோன்று பெண்ணைக்
|
|
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க
|
|
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த
|
15
|
இளைப் படு பேடை இரிய, குரைத்து எழுந்து
|
|
உரும் இசைப் புணரி உடைதரும்
|
|
பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே.
|
தலைமகற்குக் குறைநேர்ந்த
தோழி சொல்லியது. - நக்கீரனார்
|
|
மேல் |