கண்டிசின் மகளே
|
|
கண்டிசின் மகளே! கெழீஇ இயைவெனை:
|
|
ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு,
|
|
மங்கையர் பல பாராட்ட, செந் தார்க்
|
|
கிள்ளையும் தீம் பால் உண்ணா; மயில் இயல்
|
5
|
சேயிழை மகளிர் ஆயமும் அயரா;
|
|
தாழியும் மலர் பல அணியா; கேழ் கொளக்
|
|
காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன்
சுவர்ப்
|
|
பாவையும் பலி எனப் பெறாஅ; நோய் பொர,
|
|
இவை கண்டு, இனைவதன்தலையும், நினைவிலேன்,
|
10
|
கொடியோள் முன்னியது உணரேன், 'தொடியோய்!
|
|
இன்று நின் ஒலி குரல் மண்ணல்' என்றதற்கு,
|
|
எற் புலந்து அழிந்தனளாகி, தற் தகக்
|
|
கடல்அம் தானை கை வண் சோழர்,
|
|
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன,
|
15
|
நிதியுடை நல் நகர்ப் புதுவது புனைந்து,
|
|
தமர் மணன் அயரவும் ஒல்லாள், கவர்முதல்
|
|
ஓமை நீடிய உலவை நீள் இடை,
|
|
மணி அணி பலகை, மாக் காழ் நெடு வேல்,
|
|
துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின்
|
20
|
அறியாத் தேஎத்து அருஞ் சுரம் மடுத்த
|
|
சிறியோற்கு ஒத்த என் பெரு மடத் தகுவி,
|
|
'சிறப்பும் சீரும் இன்றி, சீறூர்
|
|
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை
|
|
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில்
|
25
|
ஏதில் வறு மனைச் சிலம்பு உடன் கழீஇ,
|
|
மேயினள்கொல்?' என நோவல் யானே.
|
மகட் போக்கிய செவிலி
சொல்லியது. - நக்கீரர்
|
|
மேல் |