கயந் தலை மடப் பிடி
|
|
கயந் தலை மடப் பிடி பயம்பில் பட்டென,
|
|
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ,
|
|
ஒய்யென எழுந்த செவ் வாய்க் குழவி
|
|
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண்,
|
5
|
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும்
|
|
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு
|
|
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று; தாயும்
|
|
'இன் தோள் தாராய், இறீஇயர் என் உயிர்!'
என,
|
|
கண்ணும் நுதலும் நீவி, தண்ணென,
|
10
|
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ,
|
|
தாழிக் குவளை வாடு மலர் சூட்டி,
|
|
'தருமணற் கிடந்த பாவை என்
|
|
அருமகளே என முயங்கினள் அழுமே!
|
மகட் போக்கிய தாயது நிலைமை
கண்டார் சொல்லியது. - ......
|
|
மேல் |