வினைவயிற் பிரிதல் யாவது
|
|
வினைவயிற் பிரிதல் யாவது? 'வணர் சுரி
|
|
வடியாப் பித்தை, வன்கண், ஆடவர்
|
|
அடி அமை பகழி ஆர வாங்கி;
|
|
வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலை,
|
5
|
படுமுடை நசைஇய வாழ்க்கைச் செஞ் செவி
|
|
எருவைச் சேவல் ஈண்டுகிளை பயிரும்
|
|
வெருவரு கானம் நீந்தி, பொருள் புரிந்து
|
|
இறப்ப எண்ணினர்' என்பது சிறப்பக்
|
|
கேட்டனள்கொல்லோ தானே? தோள் தாழ்பு
|
10
|
சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல்,
|
|
அம் மா மேனி, ஆய் இழை, குறுமகள்
|
|
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த
|
|
நல் வரல் இள முலை நனைய;
|
|
பல் இதழ் உண்கண் பரந்தன பனிஏ.
|
பிரிவுணர்த்திய தோழி,
தலைமகளது வேறுபாடு கண்டு, 'முன்னமே
உணர்ந்தாள். நம் பெருமாட்டி' என்று,
தலைமகனைச் செலவு விலக்கியது. - மதுரைப்
புல்லங்கண்ணனார்
|
|
உரை |
மேல் |