வினை வலம்படுத்த
|
|
வினை வலம்படுத்த வென்றியொடு மகிழ்
சிறந்து,
|
|
போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த,
|
|
தண் பெயல் பொழிந்த பைதுறு காலை,
|
|
குருதி உருவின் ஒண் செம் மூதாய்
|
5
|
பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப,
|
|
பைங் கொடி முல்லை மென் பதப் புது வீ
|
|
வெண் களர் அரிமணல் நன் பல தாஅய்,
|
|
வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில்,
|
|
கருங் கோட்டு இரலைக் காமர் மடப் பிணை
|
10
|
மருண்ட மான் நோக்கம் காண்தொறும், 'நின்
நினைந்து
|
|
"திண் தேர் வலவ! கடவு" எனக் கடைஇ,
|
|
இன்றே வருவர்; ஆன்றிகம் பனி' என,
|
|
வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும்
|
|
நின் வலித்து அமைகுவென்மன்னோ அல்கல்
|
15
|
புன்கண் மாலையொடு பொருந்தி, கொடுங் கோற்
|
|
கல்லாக் கோவலர் ஊதும்
|
|
வல் வாய்ச் சிறு குழல் வருத்தாக்காலே!
|
தலைமகன் பிரிவின்கண்
அழிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்குச்
சொல்லியது. - மதுரைக் கவுணியன் பூதத்தனார்
|
|
உரை |
மேல் |