வீங்கு விளிம்பு உரீஇய
|
|
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை
|
|
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்
|
|
விடுதொறும் விளிக்கும் வெவ் வாய் வாளி
|
|
ஆறு செல் வம்பலர் உயிர் செலப்
பெயர்ப்பின்,
|
5
|
பாறு கிளை பயிர்ந்து படுமுடை கவரும்
|
|
வெஞ் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உண
|
|
அரிய வஞ்சினம் சொல்லியும், பல் மாண்
|
|
தெரி வளை முன்கை பற்றியும், 'வினைமுடித்து
|
|
வருதும்' என்றனர் அன்றே தோழி!
|
10
|
கால் இயல் நெடுந் தேர்க் கை வண் செழியன்
|
|
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த
|
|
வேலினும் பல் ஊழ் மின்னி, முரசு என
|
|
மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி,
|
|
நேர் கதிர் நிரைத்த நேமிஅம் செல்வன்
|
15
|
போர் அடங்கு அகலம் பொருந்திய தார்போல்,
|
|
திருவில் தேஎத்துக் குலைஇ, உரு கெழு
|
|
மண் பயம் பூப்பப் பாஅய்,
|
|
தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே?
|
பிரிவின்கண் வற்புறுக்கும்
தோழிக்குத் தலைமகள் சொல்லியது;
தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்;
பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள்
தோழிக்குச் சொற்றதூஉம் ஆம்.- ஆலம்பேரி
சாத்தனார்.
|
|
உரை |
மேல் |