வெள்ளி விழுத் தொடி
|
|
வெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை,
|
|
வள்ளி நுண் இடை வயின் வயின் நுடங்க;
|
|
மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ,
|
|
காஞ்சி நீழல், தமர் வளம் பாடி,
|
5
|
ஊர்க் குறுமகளிர் குறுவழி, விறந்த
|
|
வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின்
|
|
தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர!
|
|
விழையா உள்ளம் விழையும் ஆயினும்,
|
|
என்றும், கேட்டவை தோட்டி ஆக மீட்டு, ஆங்கு,
|
10
|
அறனும் பொருளும் வழாமை நாடி,
|
|
தற் தகவு உடைமை நோக்கி, மற்று அதன்
|
|
பின் ஆகும்மே, முன்னியது முடித்தல்;
|
|
அனைய, பெரியோர் ஒழுக்கம்; அதனால்,
|
|
அரிய பெரியோர்த் தெரியுங்காலை,
|
15
|
நும்மோர் அன்னோர் மாட்டும், இன்ன
|
|
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்,
|
|
மெய் யாண்டு உளதோ, இவ் உலகத்தானே?
|
'வரைந்து எய்துவல்' என்று
நீங்கும் தலைமகன், 'தலைமகளை ஆற்றுவித்துக்
கொண் டிருத்தல் வேண்டும்' என்று தோழியைக்
கைப்பற்றினாற்கு, கைப்பற்றியது தன்னைத் தொட்டுச் சூளுறுவானாகக் கருதி, சொல்லியது. -
ஓரம்போகியார்
|
|
உரை |
மேல் |