வேந்து வினை முடித்தகாலை
|
|
வேந்து வினை முடித்தகாலை, தேம் பாய்ந்து
|
|
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின்
|
|
வென் வேல் இளையர் இன்புற, வலவன்
|
|
வள்பு வலித்து ஊரின் அல்லது, முள் உறின்
|
5
|
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா
|
|
நல் நால்கு பூண்ட கடும் பரி நெடுந் தேர்,
|
|
வாங்குசினை பொலிய ஏறி; புதல
|
|
பூங் கொடி அவரைப் பொய் அதள் அன்ன
|
|
உள் இல் வயிற்ற, வெள்ளை வெண் மறி,
|
10
|
மாழ்கியன்ன தாழ் பெருஞ் செவிய,
|
|
புன் தலைச் சிறாரோடு உகளி, மன்றுழைக்
|
|
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும்
|
|
சீறூர் பல பிறக்கு ஒழிய, மாலை
|
|
இனிது செய்தனையால் எந்தை! வாழிய!
|
15
|
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும்
|
|
ஆய் தொடி அரிவை கூந்தற்
|
|
போது குரல் அணிய வேய்தந்தோயே!
|
வினை முற்றி மீளும்
தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன்
இளநாகனார்
|
|
உரை |
மேல் |