வேர் முழுது உலறி
|
|
வேர் முழுது உலறி நின்ற புழற்கால்,
|
|
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்,
|
|
வற்றல் மரத்த பொற் தலை ஓதி
|
|
வெயிற் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள,
|
5
|
நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன்
காட்டு
|
|
ஆள் இல் அத்தத்து, அளியள் அவனொடு
|
|
வாள்வரி பொருத புண் கூர் யானை
|
|
புகர் சிதை முகத்த குருதி வார,
|
|
உயர் சிமை நெடுங் கோட்டு உரும் என முழங்கும்
|
10
|
'அருஞ் சுரம் இறந்தனள்' என்ப பெருஞ் சீர்
|
|
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
|
|
தொல் நிலை முழு முதல் துமியப் பண்ணிய
|
|
நன்னர் மெல் இணர்ப் புன்னை போல,
|
|
கடு நவைப் படீஇயர்மாதோ களி மயில்
|
15
|
குஞ்சரக் குரல குருகோடு ஆலும்,
|
|
துஞ்சா முழவின், துய்த்து இயல் வாழ்க்கை,
|
|
கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்,
|
|
ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம் பாற்
|
|
சிறு பல் கூந்தற் போது பிடித்து அருளாது,
|
20
|
எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம்,
|
|
'எனக்கு உரித்து' என்னாள், நின்ற என்
|
|
அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே!
|
மகட்போக்கிய
செவிலித்தாய் சொல்லியது. - கயமனார்
|
|
உரை |
மேல் |