வேலும் விளங்கின
|
|
வேலும் விளங்கின; இளையரும் இயன்றனர்;
|
|
தாரும் தையின; தழையும் தொடுத்தன;
|
|
நிலம் நீர் அற்ற வெம்மை நீங்கப்
|
|
பெயல் நீர் தலைஇ, உலவை இலை நீத்துக்
|
5
|
குறு முறி ஈன்றன, மரனே; நறு மலர்
|
|
வேய்ந்தன போலத் தோன்றி, பல உடன்
|
|
தேம் படப் பொதுளின பொழிலே; கானமும்,
|
|
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள்,
|
|
பால் எனப் பரத்தரும் நிலவின் மாலைப்
|
10
|
போது வந்தன்று, தூதே; நீயும்
|
|
கலங்கா மனத்தை ஆகி, என் சொல்
|
|
நயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவி!
|
|
தெற்றி உலறினும், வயலை வாடினும்,
|
|
நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும்,
|
15
|
நின்னினும் மடவள் நனி நின் நயந்த
|
|
அன்னை அல்லல் தாங்கி, நின் ஐயர்
|
|
புலி மருள் செம்மல் நோக்கி,
|
|
வலியாய் இன்னும்; தோய்கம், நின் முலையே!
|
உடன்போக்கு நேர்ந்த தோழி
தலைமகட்குச் சொல்லியது. - கயமனார்
|
|
உரை |
மேல் |