வேளாப் பார்ப்பான்
|
|
வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த
|
|
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன,
|
|
தளை பிணி அவிழா, சுரி முகப் பகன்றை,
|
|
சிதரல் அம் துவலை தூவலின், மலரும்
|
5
|
தைஇ நின்ற தண் பெயல் கடைநாள்,
|
|
வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை,
|
|
விசும்பு உரிவதுபோல், வியல் இடத்து ஒழுகி,
|
|
மங்குல் மா மழை, தென் புலம் படரும்
|
|
பனி இருங் கங்குலும் தமியள் நீந்தி,
|
10
|
தம் ஊரோளே, நன்னுதல்; யாமே,
|
|
கடி மதில் கதவம் பாய்தலின், தொடி பிளந்து,
|
|
நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு,
|
|
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி,
|
|
கழிப் பிணிக் கறைத் தோல் பொழி கணை
உதைப்பு,
|
15
|
தழங்குகுரல் முரசமொடு முழங்கும் யாமத்து,
|
|
கழித்து உறை செறியா வாளுடை எறுழ்த் தோள்,
|
|
இரவுத் துயில் மடிந்த தானை,
|
|
உரவுச் சின வேந்தன் பாசறையேமே.
|
தலைமகன் பருவங் கண்டு
சொல்லியது. வினைமுற்றும் தலைமகன் தன்
நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம். - ஆவூர்
மூலங் கிழார்
|
|
உரை |
மேல் |