வேனிற் பாதிரிக் கூனி
|
|
வேனிற் பாதிரிக் கூனி மா மலர்
|
|
நறை வாய் வாடல் நாறும் நாள், சுரம்,
|
|
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப,
|
|
எம்மொடு ஓர் ஆறு படீஇயர், யாழ நின்
|
5
|
பொம்மல் ஓதி பொதுள வாரி,
|
|
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்துச்
|
|
சுரும்பு சூழ் அலரி தைஇ, வேய்ந்த நின்
|
|
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும்
|
|
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய், அணி கொள
|
10
|
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை
|
|
மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி,
|
|
வல்லுவைமன்னால் நடையே கள்வர்
|
|
பகை மிகு கவலைச் செல் நெறி காண்மார்,
|
|
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து,
|
15
|
நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்து,
|
|
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல்
|
|
கல்லா உமணர்க்குத் தீ மூட்டு ஆகும்,
|
|
துன்புறு தகுவன ஆங்கண், புன் கோட்டு
|
|
அரில் இவர் புற்றத்து அல்கு இரை நசைஇ,
|
20
|
வெள் அரா மிளிர வாங்கும்
|
|
பிள்ளை எண்கின் மலைவயினானே.
|
உடன் போகாநின்ற
தலைமகட்குத் தலைமகன் சொல்லியது. - உறையூர்
மருத்துவன் தாமோதரனார்
|
|
உரை |
மேல் |