வைகல்தோறும் பசலை பாய
|
|
'வைகல்தோறும் பசலை பாய, என்
|
|
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று, ஒய்யென;
|
|
அன்னையும் அமரா முகத்தினள்; அலரே,
|
|
வாடாப் பூவின் கொங்கர் ஓட்டி,
|
5
|
நாடு பல தந்த பசும் பூட் பாண்டியன்
|
|
பொன் மலி நெடு நகர்க் கூடல் ஆடிய
|
|
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே; ஈங்கு யான்
|
|
சில நாள் உய்யலென் போன்ம்' எனப் பல
நினைந்து,
|
|
ஆழல் வாழி, தோழி! வடாஅது,
|
10
|
ஆர் இருள் நடு நாள் ஏர் ஆ உய்ய,
|
|
பகை முனை அறுத்துப் பல் இனம் சாஅய்,
|
|
கணம்சால் கோவலர் நெடு விளிப் பயிர்
அறிந்து,
|
|
இனம் தலைத் தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்றுத்
|
|
தழூஉப் பிணர் எருத்தம் தாழப் பூட்டிய
|
15
|
அம் தூம்பு அகல் அமைக் கமஞ்செலப் பெய்த
|
|
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி,
|
|
கன்றுடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம்
|
|
நேரா வன் தோள் வடுகர் பெரு மகன்,
|
|
பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளதை
|
20
|
அயிரி யாறு இறந்தனர்ஆயினும், மயர் இறந்து
|
|
உள்ளுபதில்ல தாமே பணைத் தோள்,
|
|
குரும்பை மென் முலை, அரும்பிய சுணங்கின்,
|
|
நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இருங் கூந்தல்,
|
|
மாக விசும்பின் திலகமொடு பதித்த
|
25
|
திங்கள் அன்ன நின் திரு முகத்து,
|
|
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே.
|
தலைமகன் பிரிவின்கண்
வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. -
நக்கீரர்
|
|
உரை |
மேல் |