வைகு புலர் விடியல்
|
|
வைகு புலர் விடியல், மை புலம் பரப்ப,
|
|
கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின்
|
|
எரி மருள் பூஞ் சினை இனச் சிதர் ஆர்ப்ப,
|
|
நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து,
|
5
|
குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர,
|
|
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர்
|
|
ஓதைத் தெள் விளி புலம்தொறும் பரப்ப,
|
|
கோழிணர் எதிரிய மரத்த, கவினி,
|
|
காடு அணி கொண்ட காண்தகு பொழுதில்,
|
10
|
நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய்,
|
|
நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த
|
|
நல் தோள் நெகிழ, வருந்தினள்கொல்லோ
|
|
மென் சிறை வண்டின் தண் கமழ் பூந் துணர்
|
|
தாது இன் துவலை தளிர் வார்ந்தன்ன
|
15
|
அம் கலுழ் மாமை கிளைஇய,
|
|
நுண் பல் தித்தி, மாஅயோளே?
|
தலைமகன் பொருள்வயிற்
பிரிந்தவிடத்து, கிழத்தியை நினைந்து
சொல்லியது. - குன்றியனார்
|
|
உரை |
மேல் |