கழிப் பூங் குற்றும்
|
|
கழிப் பூங் குற்றும், கானல் அல்கியும்,
|
|
வண்டற் பாவை வரி மணல் அயர்ந்தும்,
|
|
இன்புறப் புணர்ந்தும், இளி வரப் பணிந்தும்,
|
|
தன் துயர் வெளிப்படத் தவறி, நம் துயர்
|
5
|
அறியாமையின், அயர்ந்த நெஞ்சமொடு
|
|
செல்லும், அன்னோ; மெல் அம் புலம்பன்!
|
|
செல்வோன் பெயர் புறத்து இரங்கி, முன்
நின்று,
|
|
தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம்
|
|
எய்தின்றுகொல்லோ தானே? எய்தியும்,
|
10
|
காமம் செப்ப, நாண் இன்றுகொல்லோ?
|
|
உதுவ காண், அவர் ஊர்ந்த தேரே;
|
|
குப்பை வெண் மணற் குவவுமிசையானும்,
|
|
எக்கர்த் தாழை மடல்வயினானும்,
|
|
ஆய் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு,
|
15
|
சிறுகுடிப் பரதவர் பெருங் கடல் மடுத்த
|
|
கடுஞ் செலல் கொடுந் திமில் போல,
|
|
நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே!
|
தலைமகற்குக் குறை நேர்ந்த
தோழி தலைமகட்குத் குறை நயப்பக் கூறியது.
-உலோச்சனார்
|
|
மேல் |