கள்ளி அம் காட்ட
|
|
'கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை
|
|
வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து,
|
|
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
|
|
இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து,
|
5
|
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்
|
|
கொலை வில் ஆடவர் போல, பலவுடன்
|
|
பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும்
|
|
அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்,
|
|
இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
|
10
|
நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு
|
|
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி,
|
|
நறவு மகிழ் இருக்கை, நன்னன் வேண்மான்
|
|
வயலை வேலி வியலூர் அன்ன, நின்
|
|
அலர்முலை ஆகம் புலம்ப, பல நினைந்து,
|
15
|
ஆழல்' என்றி தோழி! யாழ என்
|
|
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து,
|
|
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில்
|
|
அறல் அவிர் வார் மணல் அகல்யாற்று அடைகரை,
|
|
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி,
|
20
|
கலிழ் தளிர் அணிந்த இருஞ் சினை மாஅத்து
|
|
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர்,
|
|
புகை புரை அம் மஞ்சு ஊர,
|
|
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே?
|
வற்புறுக்கும் தோழிக்குத்
தலைமகள் சொல்லியது. - மாமூலனார்
|
|
மேல் |