களவும் புளித்தன
|
|
களவும் புளித்தன; விளவும் பழுநின;
|
|
சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர்,
|
|
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு,
|
|
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து
|
5
|
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு
|
|
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக,
|
|
இளையர் அருந்த, பின்றை, நீயும்
|
|
இடு முள் வேலி முடக் கால் பந்தர்,
|
|
புதுக் கலத்து அன்ன செவ் வாய்ச் சிற்றில்,
|
10
|
புனை இருங் கதுப்பின் நின் மனையோள் அயர,
|
|
பாலுடை அடிசில் தொடீஇய, ஒரு நாள்,
|
|
மா வண் தோன்றல்! வந்தனை சென்மோ
|
|
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும்
|
|
மடி விடு வீளை வெரீஇ, குறு முயல்
|
15
|
மன்ற இரும் புதல் ஒளிக்கும்
|
|
புன்புல வைப்பின் எம் சிறு நல் ஊரே.
|
இரவுக்குறித் தலைமகளை இடத்து
உய்த்து வந்து, தோழி தலைமகனை வரைவு கடாயது. -
நன்பலூர்ச் சிறுமேதாவியார்
|
|
மேல் |